Friday, October 14, 2016


பறவையின் பெயர் : ஆலா அல்லது டெர்ன் (Tern)
புகைபடம் எடுக்க பட்ட இடம் : கன்னியாகுமரி
Aperture : 6.3,
ISO : 125,
Shutter Speed : 1/200
WB:5200k
Focus Mode: AF-C
Camera : Nikon D810
Lens: Tamron 150-600mm @ 460mm.
நாள்: 10-10-2016
ஆலா அல்லது டெர்ன் (Tern) புவிமுனைகளில் வாழும் ஒரு பறவை. உலகிலேயே அதிக தூரம், சுமார் 12,000 மைல்கள்ஒரு வழியில், வட துருவப் பிரதேசத்திலிருந்து தென் துருவப் பிரதேசத்துக்கு குளிர் நாட்களில் பறந்து இடம் பெயரும்.
ஆலா பருமனில் புறாவை விட சற்றே மெலிந்திருக்கும். உடலை விட நீளமான இறக்கைகள் கொண்டது ஆலா. அதன்வால் சிறகுகள் மீனின் வால் பொன்ற அமைப்பில் இருக்கும். இறக்கைகளின் மேல் புரம் சாம்பல் நிறத்திலும் அடிப் புரமும் வயிறும் வெள்ளையாகவும் இருக்கும்[1]. இப்பறவையின் கால்கள் குட்டையானவை. தலை, கழுத்து, மார்பு, வயிறு, கால்கள், அலகு இவற்றின் நிறம் ஒவ்வொரு வகை ஆலாவில் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆலாக்கள் இரை தேடுவதற்காக ஆறுஏரிகடல் இவற்றுக்கு மேல் ஒரு கூட்டமாகப் பறந்து சென்று கொண்டிருக்கும். திடீரென ஒரு ஆலா செங்குத்தாக நீருக்குள் விழுந்து அடுத்த கணம் வாயில் ஒரு மீனுடன் வெளி வந்து விண்ணில் பறக்கும். அப்படிப் பறக்கும் போதே வாயில் உள்ள மீனை உயரத் தூக்கி எறிந்து மீன் தலை கீழாக வரும் போது மீண்டும் அதனைக் கவ்வி விழுங்கும். மீனின் உடலில் பின் நோக்கிச் சாய்ந்திருக்கும் செதிள்கள் பறவையின் தொண்டையில் சிக்கிக் கொள்ளும் என்பதற்காகவே இப்படிச் செய்கிறது.
ஆலாப்பறவைகளில் கிட்டத் தட்ட நாற்பத்தைந்து வகை ஆலாக்கள் உண்டு. ஆற்று ஆலா (River Tern) என்ற பறவையை ஆறு, ஏரிகளின் அருகில் காணலாம். இவற்றின் கால்கள் சிவப்பு நிறத்திலும் அலகுகள் மஞ்சள்நிறத்திலும் இருக்கும். கோடை காலத்தில் தலையும் பின் கழுத்தும் கருப்பு நிறமாக இருக்கும்.

Wednesday, October 5, 2016



பறவையின் பெயர் : மயில் (Indian Peafowl)
புகைபடம் எடுக்க பட்ட இடம் : கன்னியாகுமரி
Aperture : 7.1,
ISO : 250,
Shutter Speed : 1/200
WB:5200k
Focus Mode: AF-C
Camera : Nikon D810
Lens: Tamron 150-600mm @ 600mm.
நாள்: 02-10-2016

நம் இந்திய நாட்டின் தேசிய பறவை மயில், இது ஒரு பெண் மயில், நான் பறவை தேடி சென்ற பொழுது, இந்த மயில் நான் வருவதை கண்டு ஒளிந்து கொள்ள முற்பட்டது, சூரியன் மயிலின் பின் புறம் இருந்து ஒளி வீசி கொண்டிருந்தான், மயிலானது முழுவதுமாக மறையும் முன் என் ஒளிப்பட கருவி உதவியுடன் இயற்கை ஒளியை ஒரு மயில்.......










நானும் எனது பயணங்களும்.......... பயணம்....... ஒரு தேடல், ஏதாவது ஒன்றைத் தேடித்தான் நம் பயணங்கள் துவங்குகிறது....... ஒவ்வொரு பயணத்திற்கும் கட்டாயம் ஒரு காரணம் இருக்கும். என்னுடைய பயணங்கள் குறித்த ஒரு பார்வை இதோ ...... வாழ்க்கை எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுத்து விடுவதில்லை ..... எல்லா பயணங்களும் அல்லது எல்லோருடைய பயணங்களும் சுகமாக அமையும் என்று சொல்லி விட முடியாது...... சிறு வயதில் நாம் மேற்கொண்ட பயணங்கள் அனைத்தும் எப்பொழுதும் மகிழ்ச்சியானதுதான் என்றாலும் கூட , அந்த பயணங்களில் நமக்கு பிறருடைய துணை தேவைப்பட்டது...... பொதுவாக நம்முடைய பயணங்கள் பொருள் ஈட்ட வேண்டிதான் அமைகிறது, என்னுடைய முதல் பயணமும் அவ்வாறே...... எவ்வளவுதான் பள்ளி அல்லது கல்லூரிக்குச் சென்று படித்தாலும் கூட நம் வாழ்க்கை என்பது நமது முதல் பயண அனுபவத்தில் இருந்துதான் தொடங்குகிறது ....